×

மேல்குந்தா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

 

மஞ்சூர், மே 6: மேல்குந்தா பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா பகுதி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதியில் மறைந்திருக்கும் சிறுத்தை இரவு வேளைகளில் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் சாலையோர தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ரோட்டை கடந்து கிராமத்திற்குள் புகுந்தது. இதை அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் கண்டு வீடியோ எடுத்துள்ளனர். தற்போது வீடியே வைரலாகி வரும் நிலையில் மேல்குந்தாவில் சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.

The post மேல்குந்தா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Leopard movement ,Melkunda ,Manjoor ,Nilgiris district ,Leopard ,Dinakaran ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை